Department of

Tamil

Quotes

Youth is easily deceived, because it is quick to hope.!!
“The roots of education are bitter, but the fruit is sweet.”

User
Aristotle (Greek)
--Greatest Philosopher

Tamil Department

image

About the Department

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

பெத்லகேம் கல்வியியல் கல்லூரியில் தமிழ்த்துறை 2005 - ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இத்துறை செந்தமிழைச் சீர்மல்கப் போற்றி அன்னைத்தமிழை மாணவர்களுக்கு எழுத்தாலும், பேச்சாலும் புகட்டி புது உருவம் அளித்து வருகிறது. கற்றல் கற்பித்தல் முறைகளில் மாணவர் கருத்தரங்கம், பட்டிமன்றம், குழுவிவாதம், இ-கற்றல், காணொலிக் காட்சிவழிக் கற்றல் போன்ற புதுமைகளை புகுத்தி கல்வியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பாரதி இலக்கியமன்றம் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் இயங்கி வருகின்றது. இக்கழகம் மூலம் மாணவர்களுக்கு இலக்கிய சமூகச் செய்திகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. குறிஞ்சி கபிலர் தமிழ் சங்கம் நாமக்கல், தமிழ்நாடு கலை இலக்கிய கழகம் மற்றும் கவிஞன் பதிப்பகம் கொட்டாரத்துடன் இணைந்து மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்திட பல்வேறு கலை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த்துறை அறிவை புகட்டுவதோடு ஒழுக்கம், சுயமரியாதை, மனிதநேய பண்புகளை தன் மாணவர்களிடம் வளர்த்து வருகிறது.

“வளர்க தமிழ்
ஓங்குக அதன் புகழ்”

Achievements


  • 2005-2006-ஆம் கல்வியாண்டில தமிழ்த்துறை மாணவி கீதாம்பாள் கல்லூரி அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
  • 2006-2007-ஆம் ஆண்டில் மாணவி வனிதா செய்முறைத்தேர்வில் கல்லூரி அளவில் முதலிடத்தைப் பிடித்தார்.
  • 2007-2008-ஆம் ஆண்டில் பா.சுகிர்தா ரோஸ் என்ற மாணவி கல்லூரி அளவில் முதலிடத்தையும் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.
  • மேலும் விஜிலா, சஜிதா போன்ற மாணவிகள் குமரி அரிமா சங்கம் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றனர்.
  • 2011-2012 -ஆம் ஆண்டில் மாணவர் ஜாண்மோசஸ் புனித இஞ்ஞாசியர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கலைப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுப் பெற்றார்.
  • 2012-2013 -இல் மாணவி நிஷாந்தினி புனித இஞ்ஞாசியர் கல்வியியல் கல்லூரியில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசைப் பெற்றார்.
  • 2014 - ஆம் ஆண்டு “அற இலக்கியத்தில் கல்வி சிந்தனைகள்”; என்ற தலைப்பில் கல்லூரி அளவில் கருத்தரங்கம் தமிழ்த்துறையால் நடத்தப்பட்டது.
  • 2014-2015 -ஆம் ஆண்டு மாணவிகள் லிற்றில் பிளவர் மற்றும் இந்திரா கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற “கற்பித்தல் துணைக்கருவிகள் கண்காட்சியில்” பங்குபெற்று முதல் பரிசைப் பெற்றனர்.
  • 2015-2016 -ஆம் ஆண்டு மாணவி ஆ. ஆன்றிஷா பிரஸ் கிளப் கன்னியாகுமரி நடத்திய கலைப்போட்டியில் பங்கு பெற்று கவிதை மற்றும் சிறுகதை போட்டிகளில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.
  • 2016-2017 -ஆம் ஆண்டு சு. சுஜி என்ற மாணவி புனித டிறினிட்டி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் குழு பாடல் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றார்.
  • மேலும் இத்துறை மாணவர்கள் 2015 - ஆம் ஆண்டு முதல் கவிஞன் பதிப்பகம் கொட்டாரம் மற்றும் கபிலர் தமிழ் சங்கம், நாமக்கல் நடத்தும் கலை போட்டிகளில் பங்குபெற்று பாவலர் விருது, இலக்கிய செல்வர் விருது, ஓவியச்சாரல் விருது போன்ற விருதுகளை ஆண்டுதோறும் பெற்று வருகின்றனர்.
  • மேலும் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்று இத்துறை கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறது.
  • இத்துறை பேராசிரியர் திருமதி. பா. சுகிர்தாரோஸ் அவர்களின் கல்வித் தொண்டினைப் பாராட்டி குறிஞ்சி கபிலர் சங்கம், நாமக்கல் நல்லாசிரியர் விருது - 2015, சாதனை செம்மல் விருது - 2019 போன்ற விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது.

Mission


  • மொழியின் அடிப்படைத் திறன்களை வளர்த்தல்
  • படைப்புத்திறமையை உருவாக்குதல்
  • தமிழ்மொழியின் தனித்தன்மைகளை அறியச் செய்து அதனை போற்றி வளர்த்தல்
  • இலக்கியத்தை உணர்ந்து இன்புறச் செய்தல்

Vision


  • தரமான தழிழாசிரியர்களை உருவாக்குதல்
  • தமிழ்ப்பயிற்சிஆசிரியர்களுக்கிடையே மொழிப்பற்று, நாட்டுப்பற்றினை ஊட்டுதல்
  • தமிழாசிரியர்கள் ஒரு பொருள் பற்றி திருத்தமாகப் பேசுதல், படித்தல், கேட்டல், எழுதுதல் போன்ற அடிப்படைத்திறன்களை வளர்த்தல்